நீங்கள் தேவனிடமிருந்து விலகிசென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கான 10 அறிகுறிகள் !

1. கடந்த சில நாட்களாக நீங்கள் கர்த்தருடைய வார்த்தையை (குறைந்தது ஒரு பகுதி அல்லது ஒரு அதிகாரம் கூட) படித்து தியானிக்கவில்லை. உங்களுக்கு அதைப் படிக்க வேண்டுமென்று தோன்றவேயில்லை அல்லது நீங்கள் சாக்குபோக்குகளைச் சொல்லி தள்ளிப்போடுகிறீர்கள். தேவனுடைய வார்த்தையின் மீதான உங்கள் தாகத்தை நீங்கள் இழந்துவிட்டீர்கள்.

2. கடந்த சில நாட்களாக நீங்கள் ஜெபத்தில் உங்கள் நேரத்தை செலவிடவில்லை. நீங்கள் ஜெபம் செய்தாலும் அதை கடமைக்காவே செய்கிறீர்கள். அதில் உயிர் ஏதும் இல்லை. நீங்கள் ஜெபம் செய்ய முற்படுகின்ற போதும், தேவனோடுள்ள உறவை உங்களால் உணர முடியவில்லை.

3. யாரும் உங்களைப் பார்க்கவில்லை என்று நினைத்து இரகசியமாக பாவம் செய்கிறீர்கள். இரவு நேரங்களில் தேவையில்லாமல் ஆன்லைனில் பொழுது போக்குவதால், சரியாக தூங்காமல் கொள்ளாமல் உங்கள் சரீரத்தின் ஆரோக்கியத்தை இழக்கிறீர்கள்.

4. நீங்கள் தேவாலய ஆராதனைகளில் கலந்து கொண்டு சிறிது காலம் ஆகிவிட்டது (ஆன்லைன் அல்லது ரெகுலர்). மற்ற விசுவாசிகளுடனான ஐக்கியத்தை நீங்கள் அதிகம் விரும்புகிறதில்லை.

5. உங்கள் உள்ளான மனிதனில் எந்த மாற்றமும் இல்லை. உங்கள் ஆத்துமாவில் எந்த மறுரூபமும் இல்லை. கொஞ்ச கொஞ்சமாய் நீங்கள் உங்கள் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறீர்கள். மற்றவர்களிடம் பழகுகையில் உங்கள் குணமும் நடத்தையும் சாந்தமாக இல்லாமல் கடுமையாக இருக்கின்றது.

6. நீங்கள் உலகத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் நேசிக்கத் தொடங்கிவிட்டீர்கள். சில நேரங்களில் நீங்கள் விரும்பும் மற்ற உலக காரியங்களுக்காக, கர்த்தருடைய காரியங்களை சமரசம் செய்து கொள்கிறீர்கள்.

7. உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறீர்கள். தேவனுடைய நோக்கத்தையும் அவருடைய வழிகளையும் கருத்தில் கொள்ளாமல், நீங்களாக சொந்தமாக ஊழியம் செய்கிறீர்கள். உங்கள் முன்னுரிமைகள் சரியாக இல்லை.

8. நீங்கள் தேவனை விட மனிதனை அதிகம் பின்பற்றுகிறீர்கள். சில சமயங்களில் உங்களுக்குப் பிடித்தவர்கள் உங்களுக்கு விக்கிரகமாய் மாறிப் போகிறார்கள். நீங்கள் தவறான போதகர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளை குருட்டாட்டமாய் பின்பற்றுகிறீர்கள்.

9. சரியான உபதேசங்கள் மீதான உங்கள் நம்பிக்கை  அசட்டை பண்ணப்படுகிறது . வேதாகமத்தில் உள்ளதை விட்டு விட்டு, நீங்கள் நம்புகின்றதை அடிப்படையாகக் கொண்டு உங்கள் ஆவிக்குரிய நம்பிக்கையை மாற்றுகிறீர்கள். சில நேரங்களில் நீங்கள் வேதத்தை அதன் பின்னணியோடு தியானிக்காமல், உங்கள் விருப்பங்களை அந்த வேத வசனத்திற்குள் திணிக்கிறீர்கள்.

10. தேவன் மீதான உங்கள் அன்பு குளிர்ந்துவிட்டது. இயேசுவின் மீதான உங்கள் முதல் அன்பை நீங்கள் இழந்துவிட்டீர்கள். அவர் மீது உங்களுக்குள்ள நம்பிக்கை அசைந்து வருகின்றது.


நீங்கள் கர்த்தரிடமிருந்து விலகுவதற்கு இன்னும் வேறு ஏதாவது காரணம் இருப்பதாக நீங்கள் நினைத்தால், அதையும் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. நல்ல செய்தி என்னவென்றால், நீங்கள் கர்த்தரிடம் திரும்பி வர இன்னும், தகப்பன் வீட்டின் கதவு திறந்து உள்ளது. நீங்கள் எங்கு குறைவுள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்பதை கண்டறிந்து சரிசெய்யுங்கள். அதற்கு கர்த்தருடைய கிருபை உங்களுக்கு உதவுவதாக.


#10அறிகுறிகள்

#உணருங்கள்   #மனந்திரும்புங்கள்    #திரும்பிவாருங்கள்


For Prophetic Prayer & Counselling 

Bro. Daniel Stephen

+91 ( 902-5000-326 )

1 Comments